செய்திகள் மலேசியா
தங்கள் குடியிருப்பைவிட்டு வேறு குடியிருப்புப் பகுதியில் மெதுவோட்டம்: 8 பேருக்கு அபராதம்
கோலாலம்பூர்:
தாங்கள் குடியிருக்கும் பகுதியை விட்டுவிட்டு பிற குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று மெதுவோட்டத்தில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய புகாரின் பேரில் உலுக் கிள்ளாங் போலிசார் 8 தனிநபர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான நடவடிக்கையின்போது அங்கு மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டை சோதிக்கப்பட்டதாகவும், மெதுவோட்டம் மேற்கொண்ட பகுதியின் முகவரியும் அடையாள அட்டையில் உள்ள முகவரியும் ஒத்துப்போகவில்லை என்றும்் போலிசார் சுட்டிக் காட்டியுள்ளனர்.
"அமலாக்க அதிகாரிகள் அடையாள அட்டையையும் மெதுவோட்டம் மேற்கொள்ளும் இடத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஒருவேளை அருகில் உள்ள வேறு குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
"தாங்கள் குடியிருக்கும் பகுதியை விட்டு அருகில் உள்ள வேறு இடங்களுக்குச் சென்று மெதுவோட்டத்தில் ஈடுபடுவது SOPகளுக்கு எதிரான ஒன்று," என்று அம்பாங் ஜெயா காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
