செய்திகள் மலேசியா
446 சட்டத்தை மீறினால் நடவடிக்கை பாயும்: டத்தோஸ்ரீ சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
உரிய வசதிகள் இல்லாத இடங்களில் தொழிலாளர்களை தங்கவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
மனிதவளத் துறையின் அனுமதி இன்றி வசதியற்ற இடங்களில் தொழிலாளர்களை தங்க வைத்தால் நடவடிக்கை பாயும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய விதிமீறல் தொடர்பாக பல தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி உள்ள அமைச்சர், அந்நியத் தொழிலாளர்கள் சுகாதாரமான இடங்களில் தங்குவதற்கு தொழில் நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதற்கேற்ப செயல்படாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
446 சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் MCO எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்றும் மனிதவள அமைச்சு கண்காணித்து வருகிறது.
இந் நிலையில் நீலாய் பகுதியில் உள்ள நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர் அதன் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந் நிறுவனத்தில் சுமார் 169 அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 264 என்றும் தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் மனிதவளத்துறை, சுகாதார - பாதுகாப்புத்துறை, காவல்துறை ஆகியவை இணைந்து அந்நிறுவனத்தின் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்நிறுவனம் விதிமுறைகளை மீறியது தெரிய வந்துள்ளது.
446 ஆவது சட்டத்தை மீறிய தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் 352,000 ரிங்கிட் அபராதம் வசூலிக்கக்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:40 pm
கேமரன் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்: 60 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளானது
February 24, 2026, 5:39 pm
லாரி நிறுவனத்தைப் பாதுகாக்கும் மூன்று அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேர் கைது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
February 24, 2026, 5:37 pm
உயர்க்கல்விக்கூடங்களில் சேர்வதற்கு HIV சோதனை தேவை இல்லை
February 24, 2026, 5:36 pm
சர்க்கரை, எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: KPDN அதிரடி வேட்டை
February 24, 2026, 5:33 pm
அவசர பாதையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழந்தார்
February 24, 2026, 5:27 pm
சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கும் விபச்சார மையத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்: 23 பேர் கைது
February 24, 2026, 4:53 pm
பாங்கி ரமலான் சந்தையில் அதிரடி சோதனை: 13 சட்டவிரோத குடியேறிகள் கைதாகினர்
February 24, 2026, 4:31 pm
கத்தியைக் கொண்டு தனது சகோதரனை கொலை செய்வதாக மிரட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
