
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் பலி
புத்ராஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,130 ஆக உயர்வு கண்டுள்ளது.
மலாக்கா, சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக தலா 2 பேர் இறந்துள்ளனர்.
ஜொகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
இம்மாதம் மட்டும் 161 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
கடந்த மாதம் 204 பேரும் ஜூன் மாதத்தில் 89 பேரும் இறந்துள்ளனர்.