செய்திகள் உலகம்
கோத்தபய ராஜபட்ச 24-இல் நாடு திரும்புகிறார்
கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச, வரும் 24ஆம் தேதி நாடு திரும்பவுள்ளதாக அவரது உறவினரும் ரஷியாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்க வீரதுங்க புதன்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 13ஆம் தேதி நாட்டைவிட்டு தப்பினார் கோத்தபய ராஜபட்ச. முதலில் மாலத்தீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சென்ற அவர், தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனிடையே, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அனுமதி கிடைத்ததை அடுத்து, கடந்த 11ஆம் தேதி அங்கு சென்றார்.
பாங்காக் நகரிலுள்ள விடுதியில் தங்கியுள்ள அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அறையைவிட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோத்தய ராஜபட்ச தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வரும் 24ஆம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் வீரதுங்க தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்தனர்
October 23, 2025, 9:11 am
இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை
October 23, 2025, 8:23 am
சிங்கப்பூரில் அதிகரிக்கும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள்
October 22, 2025, 7:48 am
சிங்கப்பூரில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணி: பெண்கள் மூவரும் நிரபராதி எனத் தீர்ப்பு
October 21, 2025, 3:34 pm
ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு
October 20, 2025, 3:45 pm
சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்த சேவை வாகனம் மீது மோதியது: இருவர் மரணம்
October 20, 2025, 2:36 pm
பாரிஸ் அருங்காட்சியகத்திலிருந்து 7 நிமிடத்தில் பிரெஞ்சு அரச நகைகள் கொள்ளை
October 20, 2025, 12:57 pm
