செய்திகள் உலகம்
கோத்தபய ராஜபட்ச 24-இல் நாடு திரும்புகிறார்
கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச, வரும் 24ஆம் தேதி நாடு திரும்பவுள்ளதாக அவரது உறவினரும் ரஷியாவுக்கான முன்னாள் இலங்கை தூதருமான உதயங்க வீரதுங்க புதன்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 13ஆம் தேதி நாட்டைவிட்டு தப்பினார் கோத்தபய ராஜபட்ச. முதலில் மாலத்தீவுக்கும், அங்கிருந்து சிங்கப்பூருக்கும் சென்ற அவர், தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனிடையே, தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அனுமதி கிடைத்ததை அடுத்து, கடந்த 11ஆம் தேதி அங்கு சென்றார்.
பாங்காக் நகரிலுள்ள விடுதியில் தங்கியுள்ள அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அறையைவிட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோத்தய ராஜபட்ச தன்னுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வரும் 24ஆம் தேதி அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் வீரதுங்க தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 8:40 pm
பணியாத ஈரான்: வேறுவழியின்றி 48 மணி நேரக் காலக்கெடுவைக் கைவிட்டார் அதிபர் டிரம்ப்
March 23, 2026, 4:27 pm
புனித மக்கா ரமலான் சிறப்பு: 33.8 மில்லியன் மக்களுக்கு இப்தார் விருந்து
March 23, 2026, 3:58 pm
ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 3:56 pm
லாகார்டியா விமான நிலையத்தில் பரபரப்பு: ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானது
March 23, 2026, 11:27 am
துருக்கியில் திடீர் நிலச்சரிவு: மழையில் புதைந்த கார்
March 23, 2026, 11:26 am
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: உலக பொருளாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்தல்
March 22, 2026, 4:55 pm
