
செய்திகள் மலேசியா
மக்கள் அனைவரின் பொறுமையால் தான் நாடு மீள முடியும்; இது ஓர் அறப்போர்; தியாகங்களைச் செய்வதே தற்போதைய தேவை: இஸ்மாயில் சப்ரி உருக்கமான வேண்டுகோள்
கோலாலம்பூர்:
MCO:3 முழு அளவிலான முடக்க நிலையின்போது மாவட்டங்கள், மாநிலங்கள் இடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஊரடங்கு நடவடிக்கை வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
"ஒவ்வொரு தனி நபரும் பல தியாகங்களைச் செய்வதே தற்போதைய சூழ்நிலையில் அவசியமாகிறது. சிலர் தங்கள் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தவேண்டி இருக்கும். சிலர் இரு வாரங்களுக்குத் தங்களது தொழிற்சாலைகளை மூடவேண்டி இருக்கும்.
"இருவேறு தூரப் பகுதிகளில் வசித்து வரும் திருமணமான தம்பதியர் மாவட்டம் அல்லது மாநிலங்களைக் கடந்து செல்ல அனுமதி கிடையாது. அவர்களும் அடுத்த இரு வாரங்களுக்கு பொறுமை காக்க வேண்டும்," என்று இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கேட்டுக் கொண்டார்.
மக்கள் அனைவரின் பொறுமையால் தான் நாடு மீள முடியும்; இது ஓர் அறப்போர்; தியாகங்களைச் செய்வதே தற்போதைய தேவை.
இதேவேளையில் இறப்பு நிகழ்வு அல்லது ஆபத்தான உடல்நிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பது ஆகியவற்றுக்கு அரச மலேசிய போலீஸ் படையின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்ள இயலும் என அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm