நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லை: அமெரிக்க ஆணையம் கண்டனம்

வாஷிங்டன்: 

இந்தியாவில் மதச் சுதந்திரம் கையாளப்பட்டு முறை குறித்து சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க தூதர் ரஷத் உசைன் வருத்தம் தெரிவித்தார்.

பல்வேறு மத சமூகங்கள் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு காணக் கோரி இந்திய அதிகாரிகள் மூலம் நேரடியாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச மதச் சுதந்திர மாநாட்டில் ரஷத் ஹுசைன் பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் தற்போது குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிப்படையாக படுகொலை செய்ய அழைப்பு விடுக்கப்படுகிறது.

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன.

ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் இடிக்கப்படுகின்றன.

அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகவே முஸ்லிம்கள் கரையான்கள் என்கிறார்.

இதுபோன்ற அறைகூவல்களை நாங்கள் கவனத்தில் எடுத்து கொள்கிறோம். மதச் சுதந்திரம் கையாளப்பட்டு வரும் முறை வருத்தமளிக்கிறது.

மனித உரிமைகள், மதச் சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டியது அமெரிக்காவின் கடமையாகும்.

உதய்பூரில் நடைபெற்ற படுகொலைச் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset