நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றுக்கு 2,527 பேர் பாதிப்பு: மரணங்கள் பதிவாகவில்லை

புத்ராஜெயா:

நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 2,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,571,355 ஆக உயர்வு கண்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூரில் 726, பேராக்கில் 201, சபாவில் 154, நெகிரி செம்பிலானில் 137, பினாங்கில் 127, ஜொகூரில் 79, புத்ராஜெயாவில் 65, மலாக்காவில் 58, கெடாவில் 56, பகாங்கில் 43, சரவாக்கில் 40, திரெங்கானுவில் 18, கிளந்தானில் 14, பெர்லிசில் 9, லாவுபாவின் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,617 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 43 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மரண சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 35,771 ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset