நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை

கோலாலம்பூர்:

நாட்டின் மக்கள் தொகை வரும் ஆண்டுகளில் சீராக வளர்ச்சியடையலாம் என்று தேசிய புள்ளியல் துறை கணித்துள்ளது. 

2020ஆம் ஆண்டு தரவுகள்படி நாட்டின் மக்கள் தொகை 32.45 மில்லியனாகவுள்ளது. 

இந்த எண்ணிக்கை 2060ஆண்டு 42.37ஆக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய புள்ளியல்துறை தெரிவித்தது. 

தேசிய புள்ளியல் துறையின் தரவுபடி 2030-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவின் மக்கள்தொகை 36.49 மில்லியனாக உயரலாம்.

அதேபோல் 2040-ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 39.78 மில்லியனாக மாறக்கூடும். 

2050-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 41.79 மில்லியனாகக் கூடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தரவுகள்படி மலாய் சமூகத்தினர் எண்ணிக்கை 2060ஆம் ஆண்டு 79.4 விழுக்காடாக உயரக்கூடும். 2030ஆம் ஆண்டு அது 71.8 விழுக்காடாக இருக்கும்.

அதேபோல் சீன சமூகத்தினர் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 21.1 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்பட்டது. 

ஆனால் 2060-ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 14.8 விழுக்காடாகச் சரியும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் இந்தியச் சமூகத்தினரின் மக்கள் தொகையும் சரிவைச் சந்திக்கும். 

2030-ஆம் ஆண்டில் 4.7 விழுக்காடாக இருக்கும் அது 2060-ஆம் ஆண்டில் 4.7 விழுக்காடாகக் குறையும் என்று  தேசிய புள்ளியல்துறை தெரிவித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset