நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்

புத்ராஜெயா,
நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் ஏற்பாடு செய்துள்ள “நடைபயணம்” (Walk to Safeguard Judicial Independence) குறித்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கருத்து வெளியிட்டார்.

“அது அவர்களது முடிவு. ஆனால், நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளும் அரசியலமைப்பின் கட்டுப்பாட்டில் நடைபெறுகின்றன. 

சட்டத்துறை தலைவர் தான்ஸ்ரீ முகமட் டுசுக்கி, சட்டம் & மறுசீரமைப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் மற்றும் பேரரசர் ஆகியோர் இதற்கான விளக்கங்களை ஏற்கனவே வழங்கியுள்ளனர்,” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நீதித்துறை நியமன நடைமுறை என்பது அரசியலமைப்பின் கீழ் நடைபெறும் சட்டப்பூர்வமான செயல்முறை என்பதால், அதனை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைதியான முறையில் கருத்தை வெளிப்படுத்த உரிமை இருப்பதாலும், அதே நேரத்தில் நீதித்துறையின் செயல்முறைகளை அரசியல் கோணத்தில் விமர்சிக்க கூடாது என்பதையும் அன்வார் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset