நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

மலேசிய வழக்கறிஞர்கள் சங்கம் அடுத்த வாரம் புத்ராஜெயாவில் நடத்த திட்டமிட்டுள்ள பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இதனை உறுதிப்படுத்தினார்.

அதே நாளில் நீதித்துறை அமைப்பின் பாதுகாப்பு செயலகம் சம்பந்தப்பட்ட மற்றொரு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளேன்.

வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு நான் செல்லமாட்டேன். எங்களுக்கு ஒரு செயலகக் கூட்டம் உள்ளது.

அதில் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, அரசு சாரா நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து கேட்டபோது துன் மகாதீர் சுருக்கமாக கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset