செய்திகள் மலேசியா
தேர்தல் மூலம் சபாவில் பாரிசான் பாடம் கற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிதி
கோத்த கினபாலு:
இனி தொகுதிப் பங்கீடு தொடர்பில் தேசிய முன்னணி மிகக் கவனமாக இருக்கும் என்று அம்னோ தலைவர் ஸாஹித் ஹமிதி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படுவதை பாரிசான் நேசனல் விரும்பவில்லை என்றார் அவர்.
Gabungan Rakyat Sabah- உடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 2020 செப்டம்பர் மாதம் சபாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மூலம் தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொண்டதாக ஸாஹித் ஹமிதி கூறினார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மூலையில் முடக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசியல் ரீதியில் மூலையில் முடக்கப்பட்டது என்றால் என்னவென்பதை விவரிக்கவில்லை.
எனினும், மீண்டும் அத்தகையதொரு சூழலை எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும், இனி மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஸாஹித் ஹமிதி தெரிவித்தார்.
மாநில முதல்வரை நியமிக்கும் விஷயத்தில்தான் அம்னோ ஏமாற்றப்பட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தாம் வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவ்வாறு குறிப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததும் பெர்சாத்து கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட தேசிய முன்னணி எதிர்ப்பு தெரிவித்தது.
தேர்தலில் பெர்சாத்து கட்சியைவிட தேசிய முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டது.
"இனிமேலும் அதேபோன்ற மூலையில் முடக்கப்படும் அரசியல் பயணத்தை அனுபவிக்க தேசிய முன்ணி தயாராக இல்லை. எங்களுக்குப் பலன் அளிக்காது எனில், அந்த விஷயத்தில் கவனமாக இருப்போம். மேலும் எங்கள் கை ஓங்கி இருப்பதையும் உறுதி செய்வோம்," என்று நேற்று சபா தேசிய முன்னணி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
December 14, 2025, 6:02 pm
கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்யும் வரை தேசிய முன்னணியுடன் மஇகா ஒத்துழைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 5:58 pm
ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் நேர்மையானவராக இருந்தார்: ஜாஹித்
December 14, 2025, 4:42 pm
தாப்பாவில் மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 4:40 pm
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் கட்சிகள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது: ஜாஹித்
December 14, 2025, 3:40 pm
நாட்காட்டிகளை வழங்கிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பாதுகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்
December 14, 2025, 3:26 pm
அரசாங்கத் துறையில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவை தடுக்க வேண்டும்: குலசேகரன்
December 14, 2025, 11:55 am
ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியில் இணையும் காலம் மிக விரைவில் உள்ளது: ஜாஹித்
December 14, 2025, 11:43 am
