செய்திகள் மலேசியா
பாராங் கத்தியால் வெட்டப்பட்டு ஆண் உயிரிழந்தார்
தங்காக்:
புக்கிட் காங்க்கார் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக, இரண்டு கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், பாராங் ஏந்திய மூன்று ஆண்கள் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை வெட்டியதில் அவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 30 வயதுகளில் உள்ள அந்த நபர் கைகள், கால்கள், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவுடன் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் நடந்தபோது அந்த நபர் தனது நண்பருடன் சம்பந்தப்பட்ட குழுவினரைச் சந்திக்க அந்த இடத்துக்கு சென்றிருந்தார்.
“ஒரு உணவகத்தின் வெளியே நான்கு பேர் பேசிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. சில நேரம் கழித்து அந்த இடத்துக்கு பல கார்கள் வந்தன.
“முகமூடி அணிந்த மூன்று ஆண்கள் அந்த நபரை துரத்திச் சென்றதை சிசிடிவி (CCTV) காட்சிகள் காட்டுகின்றன.
“சம்பவம் நடந்தபோது அந்த நபரிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அவர் கைகளால் தாக்குதலைத் தடுக்க முயன்றதால் கடுமையாகக் காயமடைந்தார். பின்னர் அவர் சாலையில் சரிந்து விழுந்தார்,” என்று தகவல் அளித்தவர் தெரிவித்தார்.
“அந்த நபர் கடுமையான காயங்களாலும் அதிக ரத்த இழப்பாலும் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தங்காக் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ரோஸ்லான் முஹம்மதி தாலிப் தொடர்பு கொள்ளப்பட்டபோது, இந்தச் சம்பவம் நடந்ததை உறுதி செய்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
“மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் விசாரணை செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான மூன்று வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. அவற்றில் வெள்ளை சட்டை, குறுகிய கால்சட்டை அணிந்திருந்த அந்த நபரை பாராங் ஏந்திய மூன்று ஆண்கள் துரத்துவது காணப்பட்டுள்ளது.
அந்த நபர் தப்பிக்க முடியாமல் போனதுடன், உதவி கோரி அவர் கூச்சலிட்டதும் கேட்க முடிகிறது. பின்னர் மூன்று சந்தேகநபர்கள் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் மூவரும் ரத்தம் படிந்த பாராங் ஆயுதங்களை ஏந்தி இருந்ததைப் பார்த்ததும் தங்கள் வாகனங்களுக்குள் விரைந்து ஓடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 8:09 pm
ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்: டத்தோஸ்ரீ சரவணன்
March 14, 2026, 6:15 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி நாடு திரும்ப வேண்டும்: டத்தோஶ்ரீ ரமணன்
March 14, 2026, 5:23 pm
ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் தள வாடகை 50% குறைப்பு: DBKL அறிவிப்பு
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
