செய்திகள் இந்தியா
மகாராஷ்டிர முதல்வராக அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு - துணை முதல்வரானார் தேவேந்திர ஃபட்னவீஸ்
மும்பை:
மகாராஷ்டிரத்தில், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று அவர் கூறியிருந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் ஷிண்டேவுக்கும் ஃபட்னவீஸுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இது பதவி அதிகாரத்துக்கான போராட்டம் இல்லை. ஹிந்துத்துவ கொள்கையைக் காப்பாற்றுவற்கான போராட்டம்.
கடந்த 2019இல் பாஜகவும் சிவசேனையும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை கை கோத்தது.
சிவசேனை நிறுவனத் தலைவர் பால் தாக்கரே தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்தார். இதனால்தான் சிவசேனை கட்சிக்குள் கிளர்ச்சி ஏற்பட்டது என்றார் அவர்.
மகாராஷ்டிரத்தின் 20ஆவது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசியலில் வருவதற்கு முன் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார்.
1964இல் பிறந்த அவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பால் தாக்கரேவின் சிவசேனை கட்சியில் தானேவில் இணைந்துள்ளார்.
1997இல் தாணே மாநகராட்சியின் உறுப்பினரானார். 2004இல் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவர், தற்போதைய பேரவையில் நான்காவது முறை எம்எல்ஏவாக உள்ளார். இரண்டு முறை அமைச்சர் பதவியையும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏக்நாத் ஷிண்டே பதவி வகித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
