
செய்திகள் இந்தியா
மகாராஷ்டிர முதல்வராக அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு - துணை முதல்வரானார் தேவேந்திர ஃபட்னவீஸ்
மும்பை:
மகாராஷ்டிரத்தில், பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று அவர் கூறியிருந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் ஷிண்டேவுக்கும் ஃபட்னவீஸுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இது பதவி அதிகாரத்துக்கான போராட்டம் இல்லை. ஹிந்துத்துவ கொள்கையைக் காப்பாற்றுவற்கான போராட்டம்.
கடந்த 2019இல் பாஜகவும் சிவசேனையும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால், தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை கை கோத்தது.
சிவசேனை நிறுவனத் தலைவர் பால் தாக்கரே தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி அமைத்தார். இதனால்தான் சிவசேனை கட்சிக்குள் கிளர்ச்சி ஏற்பட்டது என்றார் அவர்.
மகாராஷ்டிரத்தின் 20ஆவது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசியலில் வருவதற்கு முன் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளார்.
1964இல் பிறந்த அவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பால் தாக்கரேவின் சிவசேனை கட்சியில் தானேவில் இணைந்துள்ளார்.
1997இல் தாணே மாநகராட்சியின் உறுப்பினரானார். 2004இல் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவர், தற்போதைய பேரவையில் நான்காவது முறை எம்எல்ஏவாக உள்ளார். இரண்டு முறை அமைச்சர் பதவியையும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏக்நாத் ஷிண்டே பதவி வகித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm