செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தினசரி கொரோனா தொற்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,504 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங் கூறுகையில், கொரோனாவில் புதிய அலை எதிர்பார்த்ததற்கு முன்பே எழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இனி வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று துணை பிரதமர் லாரன்ஸ் வாங் எச்சரித்தார்.
எனினும், இப்போதைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டிய தேவையில்லை எனவும் நோய்த்தடுப்பு விதிமுறைகளில் தேவைப்படும் நேரங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 10,732 பேருக்கு சமூக பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. 772 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
இது தவிர, கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,410ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 14,25,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முஹம்மத் முய்சுவின் கட்சி அமோக வெற்றி
April 22, 2024, 10:12 am
இஸ்ரேல் தாக்குதலில் 18 குழந்தைகள் உயிரிழப்பு
April 21, 2024, 4:55 pm
டிரம்ப் ஆதரவாளர் தீயிட்டு தற்கொலை
April 21, 2024, 1:29 pm
துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை
April 21, 2024, 12:35 pm
அடுத்த அடி இன்னும் பலமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
April 21, 2024, 12:19 pm
இந்தியாவின் மசாலாவில் நச்சுப் பொருள்: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை
April 21, 2024, 9:25 am