செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தினசரி கொரோனா தொற்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,504 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங் கூறுகையில், கொரோனாவில் புதிய அலை எதிர்பார்த்ததற்கு முன்பே எழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இனி வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று துணை பிரதமர் லாரன்ஸ் வாங் எச்சரித்தார்.
எனினும், இப்போதைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டிய தேவையில்லை எனவும் நோய்த்தடுப்பு விதிமுறைகளில் தேவைப்படும் நேரங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 10,732 பேருக்கு சமூக பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. 772 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
இது தவிர, கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,410ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 14,25,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
