
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தினசரி கொரோனா தொற்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,504 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங் கூறுகையில், கொரோனாவில் புதிய அலை எதிர்பார்த்ததற்கு முன்பே எழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இனி வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று துணை பிரதமர் லாரன்ஸ் வாங் எச்சரித்தார்.
எனினும், இப்போதைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டிய தேவையில்லை எனவும் நோய்த்தடுப்பு விதிமுறைகளில் தேவைப்படும் நேரங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 10,732 பேருக்கு சமூக பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. 772 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
இது தவிர, கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,410ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 14,25,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 23, 2023, 4:34 pm
‘டிரை ஐஸ்’ கரியமில வாயுவை நுகர்ந்த நால்வர் மரணம்
September 23, 2023, 1:48 pm
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு விரைவில் தடை : பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை
September 22, 2023, 4:22 pm
பிஸ்மில்லாஹ் கூறி பன்றிக்கறி சாப்பிட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
September 22, 2023, 4:17 pm
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை: ரஷ்யா அறிவிப்பு
September 22, 2023, 1:38 pm
கனடாவில் மற்றொரு சீக்கியர் கொலை
September 21, 2023, 10:40 am
ஈஸ்வரனின் எம்.பி பதவி ரத்து மசோதா; சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி
September 20, 2023, 6:15 pm
இந்தியா நிலவுக்கு சென்றுவிட்டது, பாகிஸ்தான் பணத்துக்கு கையேந்துகிறது: நவாஸ் ஷெரீஃப்
September 20, 2023, 5:46 pm
மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ள மேலும் நெருக்கம் தேவை: சீனாவிடம் ரஷியா வேண்டுகோள்
September 20, 2023, 3:43 pm
கனடாவின் நடவடிக்கைகள் பிரிட்டன் - இந்தியா வர்த்தக பேச்சை பாதிக்குமா?
September 20, 2023, 3:29 pm