செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் தினசரி கொரோனா தொற்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,504 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஆங் யே குங் கூறுகையில், கொரோனாவில் புதிய அலை எதிர்பார்த்ததற்கு முன்பே எழுந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இனி வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று துணை பிரதமர் லாரன்ஸ் வாங் எச்சரித்தார்.
எனினும், இப்போதைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டிய தேவையில்லை எனவும் நோய்த்தடுப்பு விதிமுறைகளில் தேவைப்படும் நேரங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 10,732 பேருக்கு சமூக பரவல் மூலம் அந்த நோய் பரவியுள்ளது. 772 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
இது தவிர, கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,410ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 14,25,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 11:43 am
திருமணத்திற்கு முன் உறவு: 100 பிரம்படிகள் தண்டனை
April 8, 2026, 11:42 am
ஜகார்த்தா விமான நிலையத்தில் பரபரப்பு: மேற்கூரை இடிந்து விழுந்ததில் அருவி போலக் கொட்டிய மழைநீர்
April 8, 2026, 11:14 am
அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து கார்க் தீவில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது
April 8, 2026, 10:32 am
இயக்குனரில்லா நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பை இந்தோனேசிய கடற்படை விசாரிக்கிறது
April 8, 2026, 10:08 am
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் 2 வாரம் போரை நிறுத்தி வைக்கிறேன்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
April 7, 2026, 10:56 pm
இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
April 7, 2026, 12:50 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: திரைமறைவில் நடக்கும் சமாதானப் போர்
April 7, 2026, 11:04 am
