செய்திகள் உலகம்
அமெரிக்கப் போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு
மணிலா:
அமெரிக்கப் போர்க்கப்பலொன்று பிலிப்பைன்ஸ் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூழ்கியுள்ள அந்தக் கப்பல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. அது சுமார் 7,000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வுக்குழுவொன்று தெரிவித்தது.
USS Samuel B Roberts என்றழைக்கப்படும் அந்த கப்பல் சமார் தீவில் போரின் மத்தியில் மூழ்கடிக்கப்பட்டது. அது அக்டோபர் 25ஆம் தேதி 1944ஆம் ஆண்டில் கடல் மட்டத்துக்கு அனுப்பப்பட்டது.
உலகில் மூழ்கிய கப்பல்களிலேயே USS Samuel B Roberts ஆக ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிறிய போர்க்கப்பலான அது ஜப்பானின் அதிநவீன பெரிய போர்க்கப்பலை எதிர்த்துக் கடைசிவரை போரிட்டதாக அமெரிக்கக் கடற்படை வரலாற்றில் கூறப்படுகிறது.
அதிலிருந்த சிப்பந்திகள் கடலில் கிட்டத்தட்ட 3 நாள்கள் மிதந்து மீட்கப்படக் காத்திருந்தனர் என்றும் அவர்களில் சிலர் சுறா தாக்கியதால் மாண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. போர்க் கப்பலில் இருந்த 224 பேரில் 89 வீரர்கள் மாண்டனர் என்றும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 9:09 pm
இலங்கையில் அதிகரிக்கும் ஸ்பாக்கள்: 1700 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
April 20, 2024, 7:32 pm
பாலஸ்தீனத்தை ஐ.நா. உறுப்பு நாடாக்கும் தீர்மானம்: அமெரிக்கா ரத்து செய்தது
April 20, 2024, 1:41 pm
13 வயது சிறுமியின் திடீர் கர்ப்பத்தால் குழம்பிப் போயுள்ள மருத்துவர்கள்
April 20, 2024, 9:50 am
இலங்கைக்கு வருகிறார் ஈரான் அதிபர்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm