
செய்திகள் உலகம்
அமெரிக்கப் போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் ஆழ்கடலில் கண்டுபிடிப்பு
மணிலா:
அமெரிக்கப் போர்க்கப்பலொன்று பிலிப்பைன்ஸ் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூழ்கியுள்ள அந்தக் கப்பல் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. அது சுமார் 7,000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வுக்குழுவொன்று தெரிவித்தது.
USS Samuel B Roberts என்றழைக்கப்படும் அந்த கப்பல் சமார் தீவில் போரின் மத்தியில் மூழ்கடிக்கப்பட்டது. அது அக்டோபர் 25ஆம் தேதி 1944ஆம் ஆண்டில் கடல் மட்டத்துக்கு அனுப்பப்பட்டது.
உலகில் மூழ்கிய கப்பல்களிலேயே USS Samuel B Roberts ஆக ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிறிய போர்க்கப்பலான அது ஜப்பானின் அதிநவீன பெரிய போர்க்கப்பலை எதிர்த்துக் கடைசிவரை போரிட்டதாக அமெரிக்கக் கடற்படை வரலாற்றில் கூறப்படுகிறது.
அதிலிருந்த சிப்பந்திகள் கடலில் கிட்டத்தட்ட 3 நாள்கள் மிதந்து மீட்கப்படக் காத்திருந்தனர் என்றும் அவர்களில் சிலர் சுறா தாக்கியதால் மாண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. போர்க் கப்பலில் இருந்த 224 பேரில் 89 வீரர்கள் மாண்டனர் என்றும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm