செய்திகள் உலகம்
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
வாஷிங்டன்:
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக பயணிகள் இனி காலணிகளை அகற்ற தேவையில்லை என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
முன்னதாக, கடந்த 2006வ்ஆம் ஆண்டிலிருந்து சோதனை நடவடிக்கையின் போது பயணிகள் காலணிகளை அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்தக் கொள்கையில் மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.
2001-ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ரேட் என்ற ஆடவர் தமது காலணிகளில் வெடிப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
அதன் விளைவாக 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் பயணிகள் காலணிகளை அகற்ற வேண்டியிருந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 12, 2026, 6:15 pm
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஹந்தாவைரஸ்: இதுவரை 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன
May 11, 2026, 10:53 am
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
May 10, 2026, 10:37 am
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
May 9, 2026, 10:40 am
