
செய்திகள் உலகம்
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் நாட்டின் ஊடகங்களின் முன்னோடியாகவும் அக்குடியரசு நாட்டின் தமிழர்களின் தனித்த அடையாளமாக விளங்குகிறது தமிழ் முரசு நாளிதழ்.
தமிழ் முரசு நாளிதழ் வெளியாகி நேற்றுடன் தனது 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது.
தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் இதனை தெரிவித்தார்.
90 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் முரசு நாளிதழுக்காக தமிழர்கள் இங்கு ஒன்றாக நிற்கின்றோம். நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் தமிழ் முரசு உள்ளது என்று த. ராஜசேகர் குறிப்பிட்டார்.
இன்னும் பத்தாண்டுகளில் சிங்கப்பூரை இல்லமாய் கொண்டு, ஓர் உலக தமிழ்ச் செய்தி ஊடகத்தை உருவாக்கத் தமிழ் முரசு முயலும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழின் 90ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூர் அமைச்சர்கள், தமிழ் வாசர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am