
செய்திகள் மலேசியா
நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டவேண்டும்: பக்கத்தான் ஹரப்பான் வலியுறுத்து
கோலாலம்பூர்:
நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டவேண்டும் என பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் (உச்ச மன்றம்) (presidential council) வலியுறுத்தி உள்ளது.
நாட்டில் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனத்தை முடிவுக்குக் கொண்டு வர மாமன்னரிடம் பரிந்துரைக்க வேண்டும் என அவசர நிலைக்கான சுயாதீனக் குழுவிடம் (Special Independent Emergency Committee ) பக்காத்தான் ஹரப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் இயன்ற விரைவில் நாடாளுமன்ற அமர்வை மீண்டும் கூட்டமுடியும் என அக் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.
இத்தகைய நடவடிக்கையானது மலேசிய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும் என்றும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் வெகுவாகப் பாதித்துள்ள கிருமித் தொற்றிலிருந்து நாடு மீட்சி பெற உதவும் என்றும் பக்காத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.
"எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு அவசரநிலைப் பிரகடனத்தை நீட்டிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், அதை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
"கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. ஜனவரி 11ஆம் தேதி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் முழுமையான அதிகாரத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றிருந்த போதிலும் தொற்றுப் பரவல் குறையவில்லை.
"நடப்பு நிர்வாகம் அதிகாரத்தில் நீடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது," என பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm