நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட்டிக்சன் ஹோட்டலில் பெண் மருத்துவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்

போர்ட்டிக்சன்:

பெண் மருத்துவரின் சடலம் ஒன்று போர்ட்டிக்சனில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் இருந்து மீட்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஹோட்டல் அறையில் அப் பெண் மயங்கி கிடப்பதை பணியாளர் ஒருவர் பார்த்து தகவல் கொடுத்தார்.

உடனே அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பிற்பகல் 2.56 மணிக்கு பாசிர் பாஞ்சாங் மருத்துவமனை அதிகாரிகளால் அப்பெண்ணின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

மரணமடைந்த பெண்ணுக்கு 37 வயது. அவர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார்.

அவர் தனியாகவே அந்த ஹோட்டலில் தங்கி உள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் எந்தவொரு குற்றவியல் சம்பவங்களும் தெரியவில்லை.

சவபரிசோதனைக்கு பின்பே மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அய்டி ஸாம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset