செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் ஹோட்டலில் பெண் மருத்துவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்
போர்ட்டிக்சன்:
பெண் மருத்துவரின் சடலம் ஒன்று போர்ட்டிக்சனில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் இருந்து மீட்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஹோட்டல் அறையில் அப் பெண் மயங்கி கிடப்பதை பணியாளர் ஒருவர் பார்த்து தகவல் கொடுத்தார்.
உடனே அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பிற்பகல் 2.56 மணிக்கு பாசிர் பாஞ்சாங் மருத்துவமனை அதிகாரிகளால் அப்பெண்ணின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
மரணமடைந்த பெண்ணுக்கு 37 வயது. அவர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார்.
அவர் தனியாகவே அந்த ஹோட்டலில் தங்கி உள்ளார்.
முதல் கட்ட விசாரணையில் எந்தவொரு குற்றவியல் சம்பவங்களும் தெரியவில்லை.
சவபரிசோதனைக்கு பின்பே மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அய்டி ஸாம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 6:44 pm
பெருநாள் கொண்டாட்டங்களின் போது அந்நிய நாட்டினர் மீது ஏன் சோதனை நடத்தப்படுகிறது?: ஜைட் இப்ராஹிம்
March 23, 2026, 6:43 pm
கெடாவில் வெப்பம் அதிகரித்து வருகிறது; ஒரு மாதமாக மழை பெய்யவில்லை: மன்சோர் ஜக்காரியா
March 23, 2026, 5:24 pm
சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிய ஷா ஆலம் பகுதியில் அதிரடிச் சோதனை
March 23, 2026, 4:56 pm
பெருமழையில் தவித்த குடும்பத்திற்கு உதவிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள்
March 23, 2026, 4:28 pm
வெப்பத்தினால் உயிரிழப்பு அபாயம்: பேராசிரியர் டாக்டர் ஷரீஃபா எசாத்தின் எச்சரிக்கை
March 23, 2026, 3:54 pm
பெர்லிஸில் கடும் வறட்சி: அணைக்கட்டு நீர்மட்டம் பெருமளவில் சரிந்துள்ளது
March 23, 2026, 3:14 pm
