நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி

கோலாலம்பூர்:

அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு அம்னோ தலைவர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்கள், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காலப்போக்கில் அது குறைவான விளைவையே ஏற்படுத்தும்.

கெஅடிலான் முன்னாள் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி இதனை கூறினார்.

நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து பல அம்னோ தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரபிஸி, இந்த முடிவு குறித்து அம்னோ தலைவர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவது இயல்பானது என்றார்.

அரசியல் நடவடிக்கை எடுப்பது அம்னோவின் உரிமை. அம்னோ அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான விருப்பத்தைக் கொண்டுள்ளது.

ஆனால் அது வெளியேறுவதாக தொடர்ந்து அச்சுறுத்தி வந்தாலும் வெளியேறவில்லை என்றால், எதிர்காலத்தில் அச்சுறுத்தல்கள் புஸ்வானமாகிவிடும்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset