நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் உத்தரவு; அனைத்து தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட  கூடுதல் உத்தரவு விவகாரத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டத்தின் ஆட்சி, அதிகாரப் பிரிவினையின் கொள்கைகளை மடானி அரசாங்கம் உறுதியாகக் கடைப்பிடிக்கிறது.

நீதித்துறை எந்தவொரு வெளிப்புற செல்வாக்கிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். 

தொடர்ந்து சுதந்திரமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் நீதிபதி எடுத்த முடிவை நான் மதிக்கிறேன்.

சட்டத்தின் ஆட்சியின் கொள்கையின் அடிப்படையில், அனைத்து தரப்பினரும் நீதிபதி எடுத்த முடிவை மதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

முன்னதாக வீட்டுக் காவலில் மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிக்க டிட்டா பிற்சேர்க்கையை செயல்படுத்த நஜிப்பின் நீதித்துறை மறுஆய்வு மனுவை நேற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset