செய்திகள் மலேசியா
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
கோலாலம்பூர்:
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா இவ்வாறு சாடினார்.
வீட்டுக் காவலில் மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிக்க நஜிப் ரசாக்கின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இது மாட்சிமை தங்கிய மாமன்னர், மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது.
இன்றைய முடிவு மாமன்னர், மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரத்தைக் குறைப்பதாகத் தோன்றும் ஒரு முடிவாகும்.
மலாய் ஆட்சியாளர்கள், மாமன்னரின் அதிகாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இன்றைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மலாய் ஆட்சியாளர்களிடமும், மாமன்னரிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மன்றாடுகிறோம் என்று நஜிப்பின் தற்காப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
கடமைகளை நிறைவேற்றுவதில் இனம், தோல் நிறம் ஒரு தடையல்ல: ஹன்னா
December 22, 2025, 10:37 am
டத்தோஸ்ரீ நஜிப் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: நஜிப்பிற்கு வீட்டுக் காவல் இல்லை
December 22, 2025, 10:31 am
தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் பெருமைமிகு சாதனை படைத்த மலேசிய அணிக்கு பிரதமர் வாழ்த்து
December 22, 2025, 9:27 am
நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் நஜிப்பிற்கு ஆதரவாக ஒன்றுக் கூடிய ஆதரவாளர்கள்
December 22, 2025, 12:40 am
ஐநா உலக தியான தினம் 123 நாடுகளில் ஒரே நேரத்தில் அனுசரிக்கப்பட்டது பாராட்டுக்குரியது: டத்தோ சிவக்குமார்
December 21, 2025, 3:52 pm
