
செய்திகள் மலேசியா
சிந்திக்கும் ஆற்றல்மிக்கத் தலைமுறையை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு: டத்தோஸ்ரீ எம். சரவணன்
ஷா ஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பகுதி ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பேசியதாவது:
ஆசிரியர்கள், வருங்கால சமுதாயத்தை கட்டி எழுப்பும் அர்ப்பணிப்பாளர்கள். மேலும், மாணவ சமுதாயத்தை வடிவமைக்கும் சேவையாளர்கள்.
அடுத்த தலைமுறையை சிந்திக்கும் ஆற்றல்மிக்கத் தலைமுறையாக உருவாக்கும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு.
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். தொழில் புரட்சி 4.0க்கு ஏற்ப அடுத்த தலைமுறையை உருவாக்குவோம்.
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்
பூத்தலிற் பூவாமை நன்று
என்று ஆசிரியர்களின் உயர்வையும் அவர்களின் பொறுப்புகள் குறித்தும் தனது உரையில் அமைச்சர் சிலாகித்துப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 2:49 pm
நாட்டில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு
July 3, 2022, 2:47 pm
விபத்தில் முதியவர் பலி: அறுவர் காயம்
July 3, 2022, 2:42 pm
கோவிட்-19 தொற்றுக்கு 2,527 பேர் பாதிப்பு: மரணங்கள் பதிவாகவில்லை
July 3, 2022, 1:30 pm
துணைப் பிரதமர், அமைச்சர் பதவிகளை கோர இது நேரமல்ல: மொஹைதீனை சாடும் நஜீப்
July 3, 2022, 12:23 pm
பாஸ் கட்சி பெரிக்கத்தான் நேசனலின் சின்னத்தைப் பயன்படுத்தும்: மொஹைதின் யாசின் தகவல்
July 3, 2022, 12:05 pm
தேர்தல் மூலம் சபாவில் பாரிசான் பாடம் கற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிதி
July 3, 2022, 10:32 am
மோதலில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட இருபது பேர் கைது: பெட்டாலிங் ஜெயாவில் பரபரப்பு
July 3, 2022, 9:10 am