நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம், இந்து பிரதிநிதிகளுடனான கூட்டம்; பிரச்சினை தீர்வுக்கு மிகவும் அவசியமானது: டத்தோ சிவக்குமார்

புத்ராஜெயா:

ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம்கள், இந்து பிரதிநிதிகள் இடையில் சமாதான உடன்படிக்கையில் நடத்தப்பட்ட  கூட்டம்  பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு மிகவும் அவசியமானது.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

ரமலான் மாதத்தின் உணர்வில் அமைதியையும் வலியுறுத்துவதுடன், அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு சமாதான உடன்படிக்கை காணும் நோக்கில், முஸ்லிம், இந்து அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று முதல் கூட்டம் நடந்தது.

புத்ராஜயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இரு பிரதிநிதிகளும் ஒன்று சேர்க்கப்பட்டனர்.

பல்வேறு விவகாரங்களில் ஒரு தீர்வைக் காண்பதிற்கு இந்தக் கூட்டம் மிகவும் முக்கியமானது.

பிரதமரின் துறையின் கீழ் ஒரு சிறப்புக் குழுவை அமைப்பது, வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட நிலத் தணிக்கையை செயல்படுத்துவது ஆகியவை முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் அடங்கும்.

மலாய் சமூகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் இடையில் ஒரு அமைதியான தீர்வைக் காண்பதே இன்றைய கூட்டத்தின் முயற்சியாகும்.

இது ஆரம்பக் கட்டத்தில் நடைபெறும் முதல் பேச்சுவார்த்தையாகும்.

இனம், மதம்  உட்படஅனுமதியின்றி கட்டுமானம் போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த வட்டமேசைப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

மேலும் தெளிவான தரவுகளைப் பெறுவதற்காக, பிரதமர் துறையின் கீழ் ஒரு குழுவையும், நிலத் தணிக்கையையும் நாங்கள் முன்மொழிந்தோம் என்று அவர் கூறினார்.

அனைத்துக் கட்சிகளும் ஒரு நல்லிணக்கமான நாட்டில் வாழ விரும்புவதாகவும், ஒரு சில பொறுப்பற்ற தனிநபர்களால் ஒற்றுமையும் அமைதியும் கேள்விக்குறியாவது பொருத்தமற்றது.

உண்மையில், நாம் ஒரே நாடாக, ஒரு நல்லிணக்கமான மலேசியாவாகத் தான் வாழ்கிறோம்.

ஆனால், ஒன்று அல்லது இரண்டு நபர்கள் செய்வதை நாம் அவர்களை மறந்துவிட்டு, அதற்குப் பதிலாக அமைதியை நாட வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜைனுல் ரிஜால் அபு பாக்கார் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset