செய்திகள் மலேசியா
ஜசெகவின் 60ஆம் ஆண்டுக் காலத்தை கௌரவிப்போம்; மலேசியாவின் எதிர்காலத்தை உருவாக்குவோம்: கோபிந்த் சிங்
புத்ராஜெயா:
ஜசெக தனது 60ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், விடாமுயற்சி, நிலையான கொள்கை, நாட்டிற்கு வழங்கிய சேவைகளால் வடிவமைக்கப்பட்ட நமது நெடுந்தூர பயணத்தை நினைவுகூருகிறோம்.
ஜசெக தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் கூறினார்.
அறுபது வருடங்களாக ஜசெகவின் இந்தப் போராட்டம் மலேசியாவின் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என்ற நம்பிக்கையில் வலுபெற்று நிற்கிறது.
பல ஆண்டுகளாக முன்னெடுத்த உரிமைப் போராட்டங்கள், தியாகங்கள், சீர்திருத்தங்களின் வழி, ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தவும், பொறுப்புணர்வை மேம்படுத்தவும், நீதியை நிலைநாட்டவும், சரிசமமான வாய்ப்புகளை மக்கள் பெற ஊக்குவிக்கவும் ஜசெக் பங்களித்து வருகிறது.
நாட்டு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலிருந்து நல்லாட்சியை முன்னிறுத்துவதுவரை, எங்கள் முயற்சிகள் நீதியை நிலைநாட்டி, வெளிப்படையான, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மலேசியாவை உருவாக்க உதவியுள்ளன.
நாங்கள் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்காகப் பாடுபட்டோம்.
நிறுவனங்களின் அதிகாரப் பிரிவுகள் ஒன்றையொன்று கட்டுப்படுத்துவதையும், சமநிலைப்படுத்துவதையும் உறுதி செய்யும் நிறுவன ரீதியான சோதனைகள், சமநிலைகளை வலுப்படுத்தி, சாமானிய மலேசியர்களின் குரல்களும் ஜனநாயக உரிமைக் குரலாக ஒலிக்கவும் உறுதி செய்தது ஜசெக
இன்று நாம் காணும் முன்னேற்றம், வலுபெற்று வரும் அமைப்புகளும், பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும், நாட்டின் மீதான நம்பிக்கையைக் கைவிட மறுத்த எண்ணற்றோரின் கூட்டுப் போராட்டத்திற்கும், விடாமுயற்சியாலும் ஒற்றுமையாலும் மாற்றம் என்பது சாத்தியம் என்ற நம்பிக்கைக்கும் சான்றாகத் திகழ்கின்றன.
இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு அங்கமாக, இந்த நிலைப்பாடு தொடர்வதை உறுதி செய்வதில் டி.ஏ.பி உறுதியாக உள்ளது.
இந்த நாட்டிற்கான எங்கள் பங்கு வெறும் பதவிகளை அலங்கரிப்பது மட்டும் அல்ல, மாறாக அனைத்து மலேசியர்களும் பயன் பெறும் வகையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை வழங்குவதே ஆகும்.
அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜனநாயகத்தை முன்னிறுத்தி, அனைத்துத் தட்டு மக்களையும் அரவணைத்து, ஒன்றுபட்ட மலேசியாவைக் கட்டமைக்கும் தெளிவான நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அறத்தையும் நேர்மையையும் அடிப்படையாகக் கொண்ட செழிப்பான நாட்டில், வளர்ச்சிகள் அனைவருடனும் பகிரப்பட்டு, வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கப்பெறும் நிலையில் பொது மக்களின் நம்பிக்கையும் தொடர்ந்து வலுப்பெறும் என்பது அவாவாகும் என்று கோபிந்த் சிங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:36 pm
முஸ்லிம், இந்து பிரதிநிதிகளுடனான கூட்டம்; பிரச்சினை தீர்வுக்கு மிகவும் அவசியமானது: டத்தோ சிவக்குமார்
March 18, 2026, 9:55 pm
பாரம்பரியம் நமது வேர்; தொழில்நுட்பம் நமது வலிமையான சிறகு: டத்தோஸ்ரீ ரமணனின் உகாதி வாழ்த்து
March 18, 2026, 8:47 pm
மலேசிய வாழ் தெலுங்கு மக்கள் அனைவருக்கும் 'உகாதி சுபகாஞ்சலு': டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 18, 2026, 6:04 pm
முதலை தாக்கிய சம்பவம்: கை, கால் இன்றி கண்டுபிடிக்கப்பட்ட ஆடவரின் சடலம்
March 18, 2026, 6:02 pm
"என் பெயர் அஸ்னாஃப்களின் பட்டியலில் மட்டுமே உள்ளது": முன்னாள் தொலைக்காட்சி பிரபலம்
March 18, 2026, 6:01 pm
4 மாத குழந்தை நீரில் மூழ்கியதால் உயிரிழந்தது
March 18, 2026, 5:40 pm
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவராக டத்தோ சரவணக்குமார் நியமனம்
March 18, 2026, 5:27 pm
மின்னணு கழிவு கடத்தலை தடுக்க அமைச்சு சிறப்பு அமலாக்க பணிக்குழு அமல்படுத்துகிறது
March 18, 2026, 4:50 pm
