நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலை தாக்கிய சம்பவம்: கை, கால் இன்றி கண்டுபிடிக்கப்பட்ட ஆடவரின் சடலம் 

கினபத்தாங்கான்:

இறால் பிடிக்கும்போது முதலையால் தாக்கப்பட்டதில் காணாமல் போனவரின் சிதைந்த உடல், புதன்கிழமை அன்று இங்குள்ள செகலியூட் கிராம ஆற்றில் தேடுதல், மீட்புக் குழுக்களால் கண்டெடுக்கப்பட்டது.

28 வயதான முஹம்மத் ரையான் அப்துல்லாவின் உடல், அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், காலை 9.55 மணியளவில் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

கினபதங்கன் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் ஹைரி ஓத்து, மீட்புப் பணியின் இரண்டாம் நாளில் பாதிக்கப்பட்டவர் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

"இன்றைய மீட்புப் பணி, பாதிக்கப்பட்டவர் தீயணைப்புப் படையினரால் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு, பிற மீட்பு முகமைகள், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் காலை 9.15 மணிக்குத் தொடங்கியது.

புதன்கிழமை சினார் ஹரியான் தொடர்பு கொண்டபோது, "பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீர்குலைந்திருந்தது, இரண்டு கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பின்னர் ஒரு சறுக்கு வண்டியைப் பயன்படுத்தி கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

"காலை 10.30 மணிக்கு இந்தச் செயல்பாடு முழுமையாக நிறைவடைந்தது," என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாதிக்கப்பட்டவர் தனது தந்தையுடன் ஆற்றில் இறால் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு முதலை அவரைப் பிடித்து இழுத்துச் சென்றதாகவும், அதனால் அவர் கண்மறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset