செய்திகள் உலகம்
மலேசிய உள்நாட்டு அரசியலில் தலையிட விரும்பவில்லை: இந்தோனேசியா திட்டவட்டம்
ஜகார்தா:
இந்தோனேசியாவுக்கான தூதரை தேர்வு செய்வது மலேசியாவின் உள் விவகாரம், உரிமை என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தோனேசியா தலையிடாது என்றும் அந்த அமைச்சு கூறியதாக ஜகார்தாவின் டெம்போ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தூதரை நியமிப்பது மலேசிய அரசாங்கத்தின் தனி உரிமை என்றும், மலேசிய உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில் இருந்து இந்தோனேசியா விலகி நிற்க விரும்புகிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Teuku Faizasyah தெரிவித்துள்ளார்.
"மலேசிய உள்நாட்டு அரசியல் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாவதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் நாங்கள் இதில் தலையிடக் கூடாது.
"தூதர்களை நியமிப்பது அந்தந்த நாடுகளின் உரிமை. அவை உள்நாட்டு நடைமுறைப்படி தூதர்களைத் தேர்வு செய்கின்றன. அவ்வாறு தேர்வாகும் தூதர்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்படும். அதன் பிறகு தூதர்கள் ஜகார்தாவுக்கு அனுப்பப்படுவார்கள்.
"இந்தோனேசியாவைப் பொருத்தவரை மற்ற நாடுகளுக்கான தூதர்களைத் தேர்வு செய்வதில் கூடுதலாக ஒரு நடைமுறை உள்ளது. அதாவது, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது," என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Teuku Faizasyah மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 3:35 pm
அணு ஆயுதம் தயார்நிலை: வடகொரியாவின் புதிய நகர்வு
January 4, 2026, 5:50 pm
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
January 4, 2026, 4:15 pm
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
