செய்திகள் உலகம்
இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,200 கோடி வழங்கியது: பிரதமர் ரணில்
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,200 கோடி வழங்கியது என்று பிரதமர் ரணில் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேசுகையில், "உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1,243 கோடி) கிடைத்துள்ளது.
"அந்த நிதியில் சிறிதளவை எரிபொருள் வாங்குவதற்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
"அதேவேளையில், ஆசிய வளர்ச்சி வங்கிக்குச் செலுத்த வேண்டிய தொகையை இலங்கை செலுத்தத் தவறியதால், அந்த வங்கியிடம் இருந்து கடன் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது'' என்றார் அவர்.
இதனிடையே, இலங்கையில் பெட்ரோல் முழுமையாக முடிவடைந்துவிட்டதாகவும், பெட்ரோலுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 4, 2026, 5:50 pm
மியன்மார் தேசிய தினத்தில் சுமார் 6,000 கைதிகள் விடுதலை
January 4, 2026, 4:15 pm
சிங்கப்பூரில் 8 புதிய முதியோர் பரமாரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்
January 3, 2026, 11:11 pm
வெனிசுவெலா அதிபரையும் மனைவியையும் பிடித்து நாடு கடத்திவிட்டோம்: டிரம்ப் அறிவிப்பு
January 3, 2026, 7:30 pm
இலங்கை பாடப்புத்தகத்தில் ஓரினச் சேர்க்கை குறித்து பாடம்: பெற்றோர் அதிர்ச்சி
January 3, 2026, 6:50 pm
தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்
January 2, 2026, 10:38 pm
மழையும் பனியும் கொண்டுவந்த பேராபத்து: ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம்
January 2, 2026, 5:59 pm
இலங்கை சாலைகள் பாதுகாப்பற்றவையா?: 2025-இல் அதிகரித்த உயிரிழப்புகள்
January 2, 2026, 5:29 pm
சுவிட்சர்லந்து மதுக்கூடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது
January 2, 2026, 4:02 pm
தாய்லாந்தில் சட்டவிரோதமாக இயங்கிய சூதாட்டக் கூடத்திலிருந்து இரண்டு சிங்கங்கள் மீட்பு
January 1, 2026, 9:05 pm
