நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவிட்-19 தொற்றுக்கு 3,029 பேர் பாதிப்பு

புத்ராஜெயா:

கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 3,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,473,500 ஆக உயர்வு கண்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூரில் 501, பினாங்கில் 229, நெகிரி செம்பிலானின் 208, பேராக்கில் 174, ஜொகூரில் 126, மலாக்காவில் 108, புத்ராஜெயாவில் 88, சபாவில் 78, கெடாவில் 61, பகாங்கில் 58, சரவாக்கில் 57, திரெங்கானுவில் 23, கிளந்தானில் 21, பெர்லிசில் 8, லாபுவானில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு வரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,311 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 42 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 157 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜொகூரில் 107, சபாவில் 72 பேரும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை இலாகா அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset