
செய்திகள் மலேசியா
ஜோ பைடனுடனான சந்திப்பின் போது அனைத்துலக பிரச்சினைகளில் ஆசியான் உறுதியாக இருந்தது: பிரதமர் இஸ்மாயில்
வாஷிங்டன்:
ஆசியான் - அமெரிக்க சிறப்பு உச்ச நிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்தித்தபோது, பல அனைத்துலக விவகாரங்களில் ஆசியான் தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.
ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை மற்றும் தென் சீனக் கடல் குறித்து விவாதிக்கும்போது ஆசியான் தலைவர்களும் பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று ஆசியான் விரும்புகிறது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆசியான் தலைவர்களுடனான இரண்டு நாள் சிறப்பு உச்ச நிலை மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் மலேசிய ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
போர் யாருக்கும் ஒருக்காலும் பயனளிக்காது. உண்மையில், போரின் விளைவுகளால் பலர் உயிர், உடைமைகளை இழந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்தச் சூழ்நிலையில், ரஷ்யா-உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று மலேசியா கருதுவதாக அவர் கூறினார்.
தென்கிழக்காசிய நாடுகளும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே போரை அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகளின் தீர்க்க வேண்டும் என்றும் மலேசியா வலியுறுத்தியதாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am