செய்திகள் மலேசியா
15ஆவது பொதுத்தேர்தல் சமூக ஊடகங்களில் நடக்கும் போர்: லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்:
நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலானது சமூக ஊடகங்களில் நடக்கும் போர் போன்று இருக்கும் என்கிறார் மூத்த அரசியல் தலைவர் லிம் கிட் சியாங்.
அண்மையில் பிலிப்ஃபீன்சில் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஃபெர்டினான்ட் மார்கோசின் Ferdinand Marcos மகன் ஜூனியர் மார்கோஸ் வெற்றி பெற்றார். இது சமூக ஊடகங்களின் தவறான தகவல்கள், இணையப் பொய்களுக்கு கிடைத்துள்ள வெற்றி என்றும் மலேசியர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
"பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். ஏனெனில் இது சமூக ஊடகப் போராக அமைந்திருக்கும். 1980களில் பிலிப்ஃபீனசில் அரங்கேறிய சர்வாதிகாரமும் ஊழலும் இப்போது பொற்காலம் என்றும் அமைதி மற்றும் வளத்துக்கான காலக்கட்டம் என்றும் சமூக ஊடகங்களின் தவறான தகவல்களும் இணையப் பொய்களும் சித்திரிக்கப்படுகின்றன.
"அப்போது 70 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு, 34 பேர் கொடுமைப்படுத்தப்பட்டு, மூவாயிரம் பேர் கொல்லப்பட்டு, பத்து பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
"கடந்த பத்தாண்டுகளில் மலேசியாவில் நடைபெற்ற ஊழல்களை சமூக ஊடகங்களில் வெளிவரும் தவறான தகவல்களும் பொய்ச் செய்திகளும் மறைக்கப்படக்கூடும். ஏற்கெனவே அதுபோன்ற பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன," என்று லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 8:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை
March 28, 2024, 3:04 pm
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
March 28, 2024, 2:26 pm
டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு
March 28, 2024, 2:23 pm
செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்
March 28, 2024, 2:21 pm
பாதிக்கப்பட்ட Good year தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்துள்ளன
March 28, 2024, 2:19 pm
இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு
March 28, 2024, 2:17 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
March 28, 2024, 1:32 pm
ABGR 2024 சந்தை கண்காட்சி; ஜொகூர் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.
March 28, 2024, 1:04 pm
ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்
March 28, 2024, 12:06 pm