செய்திகள் மலேசியா
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
கோலாலம்பூர்:
புத்ராஜெயா பாதையில் இயங்கும் எம்.ஆர்.டி சேவையில் மூன்று நாட்கள் தடங்கல் ஏற்பட்ட கம்பி திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
பொது போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதன் பாதுகாப்பு காவல்துறை பிரிவும், சிலாங்கூர் மாநில காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் என கூறப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி ஸ்ரீ டாமன்சாரா மேற்கு நிலையம் அருகே கம்பிகள் திருடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திருட்டு காரணமாக புத்ராஜெயா எம்.ஆர்.டி பாதை சேவை மூன்று நாட்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டனர்.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையுடன் இணைந்து கண்காணிப்பு, தகவல் பகிர்வு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:48 pm
"நோன்புப் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்": பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவிப்பு
March 15, 2026, 1:43 pm
தெக்குன் திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களை முழுமையாக சென்றடைய வேண்டும்: மோகன் ராஜ், சரஸ்வதி
March 15, 2026, 12:34 pm
