செய்திகள் மலேசியா
"நோன்புப் பெருநாளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்": பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா:
ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு மலேசியர்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறை, ஹரிராயா எந்த நாளில் கொண்டாடப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஹரிராயா மார்ச் 20 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டால், மார்ச் 23 திங்கட்கிழமை கூடுதல் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும். இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்கும்.
அதே நேரத்தில், ஹரிராயா மார்ச் 21 சனிக்கிழமை அன்று ஏற்பட்டால், மார்ச் 20 வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
பண்டிகை காலத்தில் மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட உதவுவதற்காக இந்த அறிவிப்பு முன்பே வெளியிடப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:43 pm
தெக்குன் திட்டங்கள் இந்திய தொழில் முனைவர்களை முழுமையாக சென்றடைய வேண்டும்: மோகன் ராஜ், சரஸ்வதி
March 15, 2026, 12:34 pm
மெரிடிம் மேம்பாடு திட்டம்: கடல் கண்காணிப்பு திறன் 70% உயர்வு
March 15, 2026, 12:31 pm
