
செய்திகள் உலகம்
இலங்கைக்கு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
கொழும்பு:
இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளநிலையில், புதிய பிரதமர், அமைச்சர்கள் இந்த வாரம் தியமிக்கப்படுவர் என அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 19-ஆவது சட்டத்திருத்தத்தின் ஷரத்துகளை அமல்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், ராஜபட்ச குடும்பத்தைச் சேராதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
'திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபட்ச உள்ளார். இயல்பு நிலை திரும்பிய பின், அவர் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவார் என்று பாதுகாப்புத் துறைச் செயலர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நாளை பதவியேற்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்து உள்ளார்.
மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 10:53 pm
சீனர்களின் வருகை குறைந்துள்ள நிலையில் சிங்கப்பூர் சுற்றுலா துறையை கைதூக்கிவிடும் இந்தியர்கள்
May 22, 2022, 4:44 pm
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஆன்டனி அல்பனீசி
May 22, 2022, 12:33 pm
இலங்கையில் 2 வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து
May 20, 2022, 8:43 pm
மலேசிய உள்நாட்டு அரசியலில் தலையிட விரும்பவில்லை: இந்தோனேசியா திட்டவட்டம்
May 20, 2022, 8:04 pm
இலங்கை வன்முறை: 3 எம்.பி.க்களிடம் விசாரணை
May 20, 2022, 7:30 pm
இலங்கையில் உள்ள இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுரை
May 20, 2022, 6:22 pm
பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தோனேசியா
May 19, 2022, 3:22 pm
இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,200 கோடி வழங்கியது: பிரதமர் ரணில்
May 18, 2022, 6:05 pm
ஃபின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய அனுமதிக்கப்படாது: துருக்கி அதிபர்
May 18, 2022, 5:38 pm