
செய்திகள் உலகம்
இலங்கைக்கு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
கொழும்பு:
இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்துள்ளநிலையில், புதிய பிரதமர், அமைச்சர்கள் இந்த வாரம் தியமிக்கப்படுவர் என அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 19-ஆவது சட்டத்திருத்தத்தின் ஷரத்துகளை அமல்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும், ராஜபட்ச குடும்பத்தைச் சேராதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
'திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபட்ச உள்ளார். இயல்பு நிலை திரும்பிய பின், அவர் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவார் என்று பாதுகாப்புத் துறைச் செயலர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நாளை பதவியேற்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்து உள்ளார்.
மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm