
செய்திகள் மலேசியா
கிளந்தானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை
கோத்தபாரு:
கிளந்தானில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இத் தகவலை அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் சைனி ஹுசின் (Datuk Dr Zaini Hussin)தெரிவித்துள்ளார்.
உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை வேறொரு நாளுக்கு ஒத்தி வைத்தது ஆகியவையே பெரும்பாலானவர்களால் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், சிலர் தனிப்பட்ட காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை என்று தெரிவித்துள்ளனர் என்றும் பலர் எந்தவிதக் காரணத்தையும் கூறவில்லை என்றும் டாக்டர் சைனிஇ ஹுசின் கூறினார்.
"தடுப்பூசி போட்டுக்கொள்ள வராத அனைவருமே இரண்டாம் பகுதியில் தங்கள் பெயரைப் பதிவு செய்தவர்கள் ஆவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பயனாளிகளின் பட்டியலை வைத்து அவர்களைத் தொடர்பு கொள்வோம்.
"ஒவ்வொரு தனி நபரிடமும் பேசி அவர்களால் குறித்த நேரத்தில் வர இயலுமா என்று கேட்டு உறுதி செய்வோம். எனினும் எல்லோரையும் தொடர்புகொண்டு விடமுடியும் எனும் உத்தரவாதம் இல்லை. சிலர் தொலைபேசி அழைப்புக்குக்கூட பதில் அளிக்க மாட்டார்கள்.
"எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தேதியைத் தள்ளிப்போட விரும்புவர்கள் அதற்குரிய தகவலை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை வேறு யாருக்காவது ஒதுக்கமுடியும்," என்றார் டாக்டர் சைனி ஹுசின்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm