செய்திகள் உலகம்
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை அவசியமானது: ரஷியா
மாஸ்கோ:
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை மிக அவசியமானது என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறினார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24ஆம் தேதி போர் தொடுத்தது. தலைநகர் கீவை ரஷிய படைகளால் கைப்பற்ற முடியாவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலை ரஷிய படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், இரண்டாம் உலகப் போரின் 77ஆவது ஆண்டு வெற்றிப் பேரணி மாஸ்கோவில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ராணுவ படைகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டு அதிபர் புதின் பேசுகையில், எங்கள் நாட்டு எல்லையில் எழுந்துள்ள அபாயத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனால் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையானது சரியான நேரத்தில் நடத்தப்பட்ட அவசியமான ஒன்றாகும்.
மேற்குலக நாடுகளின் கொள்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணம், பிலோஹோவ்ரிகா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் ரஷிய படைகள் சனிக்கிழமை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
அத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
...
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:33 pm
லெபனான் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல்: மருத்துவ பணியாளர்கள் பலி
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
