நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா

 பீஜிங்: 

ஈரானில் போர் தொடர்பான தாக்குதல்களில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.

சீன செஞ்சிலுவை சங்கம் (Red Cross Society of China) மூலம் ஈரான் செம்மஞ்சள் பிறை சங்கத்திற்கு (Iran Red Crescent Society) 200,000 அமெரிக்க டாலர் அவசர உதவி வழங்கப்படும் ௭ன்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மோதலின் போது தாக்குதல்களில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு உதவுவதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர் சந்திப்பில், எந்தத் தரப்பைச் சேர்ந்ததாக இருந்தாலும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களையும் பைஜிங் கண்டிக்கிறது என்று கூறினார்.

மேலும், மோதல் உள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset