நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா

மாஸ்கோ: 

ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்படும் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மீதான தடைகளை வேறுவழியின்றி அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) தலைவர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார். 

மார்ச் 12-ஆம் தேதி வரை கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ள இந்த முடிவின்படி, இந்தியாவில் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

அதுமட்டுமின்றி, தற்போது போக்குவரத்தில் உள்ள சுமார் 10 கோடி பீப்பாய் ரஷ்ய எண்ணெய் மீதான அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக டிமிட்ரிவ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் அதிகரித்து வரும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், ரஷ்யாவின் எரிசக்தி தயாரிப்புகள் மீதான தடைகளைத் தளர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் சில தரப்பினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், உலகச் சந்தையின் தேவையைக் கருதி அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ரஷ்யாவின் பங்களிப்பு இன்றி உலகளாவிய எரிசக்தி சந்தை நிலையாக இருக்க முடியாது என்பதை இந்தத் தடை நீக்கத்தின் மூலம் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மாற்றமானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset