நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் கே.சி-135 ஸ்ட்ராட்டோடாங்கர் வகையைச் சேர்ந்த வான்வழி எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று மேற்குத் ஈராக்கில் விபத்துக்குள்ளானது.

அதே சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராணுவத்தின் தகவலின்படி, இந்த சம்பவம் துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்படவில்லை என அமெரிக்க இராணுவம் அவசரமாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஈராக்கில் உள்ள தங்களின் கூட்டணி குழுவொன்று ஏவுகணையைப் பயன்படுத்தி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அதன் அனைத்து விமானப் பணியாளர்களும் உயிரிழந்ததாகவும் ஈரான் இராணுவம் கூறியுள்ளது.

இந்த கே.சி-135 ஸ்ட்ராட்டோடாங்கர் விமானம், மேற்காசிய மோதல் காலத்தில் காணாமல் போன அமெரிக்காவின் நான்காவது இராணுவ விமானமாகும். இதற்கு முன்பு எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் என்ற மூன்று போர் விமானங்கள் குவைத்தில் அமெரிக்க கூட்டணியால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள கே.சி-135 ஸ்ட்ராட்டோடாங்கர் விமானம் பொதுவாக மூன்று பணியாளர்களால் விமானி, துணை விமானி, பிற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் அமைப்பை இயக்கும் ‘பூம்’ இயக்குநர் அவர்களால் இயக்கப்படுகிறது. 

 சில பணிகளில் ஒரு வழிகாட்டி அதிகாரியும் தேவைப்படலாம். மேலும் இந்த விமானம் அதிகபட்சமாக 37 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதலின் ஆரம்பத்தில், குவைத் இராணுவம் தவறுதலாக எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் வகையைச் சேர்ந்த மூன்று அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது. ஆனால் அந்த விமானங்களில் இருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset