செய்திகள் தமிழ் தொடர்புகள்
எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் காலமானார்
சென்னை:
ஒரு மருத்துவராக தனது அயராத பணிச்சுமைக்கிடையிலும் தமிழ் இலக்கிய உலகுக்கு அளப்பரிய பங்களிப்பு செய்த ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சையது இப்ராஹீம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் காலமானார்.
மலேசியா, சிங்கப்பூர் இரு நாடுகளுக்கும் அடிக்கடி இலக்கிய பயணம் மேற்கொண்டு இனிமையாக உறவாடக்கூடிய நல்ல எழுத்தாளர் அவர்.
1990 களுக்கு முந்தைய காலகட்டத்தில் ஹிமானா சையத் எழுதிய ஆக்கங்கள் இடம்பெறாத இதழ்கள் இல்லை என்றுகூட சொல்லலாம்.
10 சிறுகதை தொகுப்புகள்
7 நாவல்கள், ஒரு கவிதை தொகுப்பு
5 மருத்துவ கட்டுரை தொகுப்பு
6 பொது கட்டுரை தொகுப்புகள்
என்று எழுதிக் குவித்த ஆளுமை அவர்.
தனது இலக்கிய பணிகளுக்கு அச்சு வடிவம் கொடுக்க "மல்லாரி பதிப்பகம்" எனும் வெளியீட்டு நிறுவனமும் நடத்தி வந்தார்.
டாக்டர் ஹிமானா சையத், வலம்புரிஜான், மு.மேத்தா
கடந்த பத்தாண்டுகளாக எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திய ஹிமானா சையத் அவர்கள் "நர்க்கிஸ்" மகளிர் மாத இதழின் கௌரவ ஆசிரியராக பொறுப்பு வகித்து வந்தார்.
நம்பிக்கை மாதப் பத்திரிகையில் தொடக்க காலத்திலிருந்து தொடர்ந்து எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நம்பிக்கை சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
May 9, 2024, 11:19 am
கை குழந்தையோடு 4 கிலோ தங்கம்: மலேசியாவிலிருந்து சென்னை வந்த தம்பதிகள் கைது
May 5, 2024, 5:01 pm
தமிழகத்தில் நீட் தோ்வு இன்று தொடங்கியது
May 5, 2024, 10:54 am
தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டது: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
May 5, 2024, 10:48 am
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am