செய்திகள் தமிழ் தொடர்புகள்
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
சென்னை:
வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான உதகை, கொடைக்கானல் , அம் மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது.
ஆனால், உயர்நீதிமன்றம் அங்குச் செல்லும் வாகனங்கள் ஈ பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாவர்கள் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள். அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும்.
மேலும் இபாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஏற்படும் சூழல் உள்ளது.
ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை மனுத் தாக்கல் செய்து இந்தப் புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 3:48 pm
விமானப் பயணிகளுக்கு மூச்சு திணறல்: அவசரமாக திருச்சி விமான நிலையத்தில் இறங்க அனுமதி
May 19, 2024, 9:20 am
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை
May 19, 2024, 8:28 am
அயலகத் தமிழர்கள் பதிவு செய்யுமாறு தமிழக அரசு அழைப்பு
May 17, 2024, 10:55 pm
தமிழகத்தில் இருந்து 5,800 பேர் ஹஜ் பயணம்: ஹஜ் வாரியத் தலைவர் அப்துல் சமது தகவல்
May 17, 2024, 3:22 pm
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில் விமானங்கள்
May 16, 2024, 9:07 pm
எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
May 15, 2024, 8:48 pm