செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
கோவை:
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்தும் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக கூறி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரைத் தேனியில் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது.
இதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் மட்டுமே என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீது பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசிற்கு எதிராக பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 10:55 pm
தமிழகத்தில் இருந்து 5,800 பேர் ஹஜ் பயணம்: ஹஜ் வாரியத் தலைவர் அப்துல் சமது தகவல்
May 17, 2024, 3:22 pm
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில் விமானங்கள்
May 16, 2024, 9:07 pm
எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
May 15, 2024, 8:48 pm
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 13, 2024, 1:05 pm
கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்வு: மக்கள் வேதனை
May 12, 2024, 7:26 pm