
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
கோவை:
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்தும் சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக கூறி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரைத் தேனியில் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது தாராபுரம் அருகே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் சிறிய விபத்துக்குள்ளானது.
இதில் சவுக்கு சங்கருக்கு லேசான காயம் மட்டுமே என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீது பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநாகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசிற்கு எதிராக பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 4:36 pm
தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
May 30, 2025, 6:23 pm
பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது: தந்தையை சாடிய அன்புமணி
May 28, 2025, 1:56 pm
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு
May 28, 2025, 1:51 pm
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு
May 27, 2025, 1:01 pm
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்தது
May 26, 2025, 6:18 pm