செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் விரைவில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாகவும், 4 இடங்களில் இந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் முகநூல் வழியாக ஒருவர் தகவலை பரப்பியுள்ளார்.
இதனை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு நிபுணர் குழுவினர் உடனடியாக விமான நிலையத்திற்கு வருகை தந்து சோதனை செய்து வருகின்றனர்.
பயணிகளின் வாகனங்கள், உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த மிரட்டல் புரளியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதனால் திருச்சி விமான நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 3:48 pm
விமானப் பயணிகளுக்கு மூச்சு திணறல்: அவசரமாக திருச்சி விமான நிலையத்தில் இறங்க அனுமதி
May 19, 2024, 9:20 am
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை
May 19, 2024, 8:28 am
அயலகத் தமிழர்கள் பதிவு செய்யுமாறு தமிழக அரசு அழைப்பு
May 17, 2024, 10:55 pm
தமிழகத்தில் இருந்து 5,800 பேர் ஹஜ் பயணம்: ஹஜ் வாரியத் தலைவர் அப்துல் சமது தகவல்
May 17, 2024, 3:22 pm
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில் விமானங்கள்
May 16, 2024, 9:07 pm
எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
May 15, 2024, 8:48 pm