
செய்திகள் தொழில்நுட்பம்
நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது
வாஷிங்டன்:
புறப்பட்ட சில நிமிடங்களில் நாசா செயற்கைகோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் வெடித்து சிதறியது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்ட்ரா. இந்த நிறுவனம் நாசாவுடன் இணைந்து முதல் முறையாக தனது ராக்கெட்டின் மூலம் செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்தது.
அதன்படி நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து ஆஸ்ட்ரா நிறுவனத்தின் ராக் கெட் நாசாவின் 4 செயற்கைகோள்களுடன் விண்ணை நோக்கி பாய்ந்தது.
ஆனால், பூமியில் இருந்த புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ராக்கெட் திடீரென வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து ராக்கெட்டின் பாகங்கள் அண்டார்டிக் பெருங்கடலில் விழுந்தன.
இதுகுறித்து ஆஸ்ட்ரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் கெம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “எங்கள் நிறுவன ராக்கெட்டின் முதல் பயணத்தில் ஒரு சிக்கலை எதிர்கொண்டோம். எங்கள் வாடிக்கையாளரின் (நாசா) செயற்கைகோள்களை புவிவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm