செய்திகள் மலேசியா
ஜசெக அரசாங்கத்தை விட்டு வெளியேறவும், பிரதமர் நம்பிக்கையை இழக்கவும், நாடாளுமன்றம் கலைக்கப்படவும் சிலர் காத்திருக்கின்றனர்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கையை இழந்து, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, தங்கள் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதைக் காண சிலர் காத்திருப்பதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் ஒப்புக்கொண்டார்.
அந்தக் காரணத்திற்காக, அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யும் தனது முன்மொழிவு, போக்குவரத்து அமைச்சராக மட்டுமே தன்னை உள்ளடக்கும் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை, பிரதமர் நம்பிக்கையை இழந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டிய நிலை உள்ளிட்ட அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதை ஜசெக விரும்பவில்லை.
சில கட்சிகள் தங்களின் அரசியல் லட்சியங்களை அடைவதற்காக ஆடும் அரசியல் விளையாட்டுகளை ஜசெக அறிந்திருக்கிறது.
ஆனால் நாங்கள் அவர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று அவர் இன்று இங்குள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஜசெக மத்திய செயற்குழுவின்அவசரக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2026, 10:49 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; மாமன்னரின் முடிவை எதிர்ப்பது அரசியலமைப்புக்கு முரணானது: ஜாஹித்
September 19, 2026, 10:48 pm
பெர்சத்து தனியாக போட்டியிட முடியாது; கூட்டணிக்கு நண்பர்கள் தேவை: டான்ஸ்ரீ மொஹைதின்
September 19, 2026, 10:46 pm
அரசியலமைப்பின் கீழ் உள்ள மாமன்னரின் மன்னிப்பு அதிகாரத்தை மதியுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2026, 10:45 pm
அந்தோனி லோக் விலகல்; இதை தான் ஆர்டர் செய்தது ஒன்று, வந்தது ஒன்று எனக் கூறுவார்கள்: ங்காவை சீண்டிய அக்மால்
September 19, 2026, 6:48 pm
போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அந்தோனி லோக் விலகல்
September 19, 2026, 4:28 pm
கல்வி என்பது வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த முதலீடு: மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ்
September 19, 2026, 4:15 pm
