நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் பொது மன்னிப்பு விவகாரம்: கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை விவாதிக்கும்?

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்புக் கோரிக்கை குறித்து விவாதிக்க, கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம் நாளை கூடுகிறது.

முந்தைய கூட்டத்தில் நஜிப்பின் விண்ணப்பத்தை வாரியம் ஒத்திவைத்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது ஒரு அரிதான நிகழ்வு.

எதிர்பாராதவிதமாக, வாரியம் தனது நிகழ்ச்சி நிரலில் ஒரே ஒரு விஷயத்துடன் மற்றொரு கூட்டத்தை நடத்தவுள்ளது.

இதில் ஏதோ ஒரு விதமான தலையீடு இருப்பதாக நான் நினைக்கிறேன்.என்று ஓர் அதிகாரப்பூர்வ வட்டாரம் கூறியுள்ளது.

முந்தைய அறிக்கைகளின்படி, செப்டம்பர் 11 அன்று நடைபெறும் மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், மற்ற விஷயங்களுடன் நஜிப்பின் கருணை மனுவும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை கையாடல் செய்த குற்றத்திற்காக, 73 வயதான நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset