நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எப்ஏஎம் தலைவராக டத்தோ அப்துல் கனி தேர்வு: டத்தோ சேரன் உதவித் தலைவரானார்

பெட்டாலிங்ஜெயா:

எப்ஏஎம் தலைவராக டத்தோ அப்துல் கனி தேர்வு பெற்ற வேளையில் டத்தோ சேரன் உதவித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் ஆண்டுக் கூட்டமும் புதிய நிர்வாக குழு தேர்தலும் இன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, டத்தோ அப்துல் கனி ஹசான் சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டின் கால்பந்து நிர்வாக அமைப்பின் உயர் பதவிக்காக இருமுனைப் போட்டி நிலவிய இத்தேர்தலில், அப்துல் கனி 20 வாக்குகளையும், அவரது போட்டியாளரான டத்தோஸ்ரீ ஷாரில் மொக்தார் வெறும் ஐந்து வாக்குகளையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம், கால்பந்து நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கு முன்பு முன்னாள் வீரராக இருந்த பின்னணியைக் கொண்ட அப்துல் கனி, 2025-2029 பதவிக்காலத்தின் எஞ்சிய காலத்திற்கு எம்ஏஎம்மின் உயர் பதவியை வகிக்கிறார்.

சங்கத்தின் முதல் உதவித் தலைவராக டத்தோஸ்ரீ ரோஸ்மாடி இஸ்மாயில் தேர்வு செய்யப்பட்டார்.

அதே வேளையில் கால்பந்து துறையில் பரந்த அனுபவம் கொண்ட டத்தோ சேரன் நடராஜா சங்கத்தின் மூன்றாவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார்.

முகமத் அஜிசுடின், டத்தோ முகமத் அசார் பின் ஜமாலுடின், டத்தோ அலிஜஸ், டத்தோ கமாருடின், டத்தோ சையத் மஹாடி பின் சையத் ஹாசன், டத்தோ ஜைனால் அபிடின் ஹடான், டத்தோ சுராயா ஆகியோர் மத்திய செயலவை உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset