செய்திகள் மலேசியா
நஜிப்பின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைப்பு; ஹன்னா இயோவிடம் கேளுங்கள்: அஸாலினா
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விளக்கங்களும் கேள்விகளும், பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோவிடம் கேட்கப்பட வேண்டும்.
பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இதனை கூறினார்.
நான் மன்னிப்பு வாரியத்திற்குத்தான் பொறுப்பான அமைச்சர் அல்ல.
மாறாகத் தனது அமைச்சின் கீழ் உள்ள சட்ட விவகாரப் பிரிவு ஒரு செயலகமாக மட்டுமே செயல்பட்டது என்று அவர் கூறினார்.
உண்மையில், சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட ஒரு அறிக்கையிலிருந்துதான் எனக்கு இந்தத் தகவல் கிடைத்தது.
நான் இதற்குப் பொறுப்பான அமைச்சர் அல்ல.
சட்ட விவகாரப் பிரிவு என் கீழ் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்தின் மன்னிப்பு வாரியம் தொடர்பான விஷயத்தில், சட்ட விவகாரப் பிரிவு செயலகமாகச் செயல்படுகிறது.
ஆனால் அந்தந்த மாநிலத்தின் அமைச்சரும் முதலமைச்சரும்தான் மன்னிப்பு வாரியத்தில் நிர்வாகப் பிரதிநிதிகளாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:19 am
கத்தோலிக்க சமூகத்தை இழிவாக பேசிய அம்னோ தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கோரிக்கை
September 15, 2026, 10:43 am
தமிழ் இலக்கிய உலகில் கவிஞர் நா.முத்துக்குமாரின் பங்களிப்புகள் அளப்பரியது: டத்தோஶ்ரீ எம்.சரவணன் பெருமிதம்
September 15, 2026, 10:35 am
நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தலா ? அது அம்னோவின் கருத்து மட்டுமே: பிரதமர் அன்வார் பதிலடி
September 15, 2026, 10:21 am
கணவனால் 13 முறை கத்தியால் குத்தப்பட்ட மனைவி உயிரிழந்தார்
September 15, 2026, 10:02 am
கால்வாயிலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் மரணம்: கூலிமில் சம்பவம்
September 15, 2026, 9:59 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு சட்டத்தின்படி பரிசீலிக்கப்பட்டது; பாரபட்சம், வெறுப்பின் அடிப்படையில் அல்ல: பிரதமர்
September 14, 2026, 10:08 pm
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:33 pm
