செய்திகள் மலேசியா
கணவனால் 13 முறை கத்தியால் குத்தப்பட்ட மனைவி உயிரிழந்தார்
கூலிம்:
கூலிம் ஹை-டெக், தாமான் டிராம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நேற்று இரவு கணவனால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் சம்பவத்தில் மனைவி உயிரிழந்தார்.
கூலிம் மாவட்ட போலிஸ் தலைவர், ஷம்சுல் சின்ரிங் இதனை கூறினார்.
ஆரம்பகட்ட விசாரணையில், பொறாமையின் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
43 வயதான சந்தேக நபர் இரவு சுமார் 8.40 மணியளவில் லூனாஸ் போலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
தனது 39 வயதான மனைவியை வீட்டில் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் அந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு மடிக்கக்கூடிய கத்தியையும் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.
கூலிம் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களால், இரவு சுமார் 9 மணியளவில் லூனாஸ் போலிஸ் நிலையத்தில் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:19 am
கத்தோலிக்க சமூகத்தை இழிவாக பேசிய அம்னோ தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கோரிக்கை
September 15, 2026, 10:49 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைப்பு; ஹன்னா இயோவிடம் கேளுங்கள்: அஸாலினா
September 15, 2026, 10:43 am
தமிழ் இலக்கிய உலகில் கவிஞர் நா.முத்துக்குமாரின் பங்களிப்புகள் அளப்பரியது: டத்தோஶ்ரீ எம்.சரவணன் பெருமிதம்
September 15, 2026, 10:35 am
நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தலா ? அது அம்னோவின் கருத்து மட்டுமே: பிரதமர் அன்வார் பதிலடி
September 15, 2026, 10:02 am
கால்வாயிலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் மரணம்: கூலிமில் சம்பவம்
September 15, 2026, 9:59 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு சட்டத்தின்படி பரிசீலிக்கப்பட்டது; பாரபட்சம், வெறுப்பின் அடிப்படையில் அல்ல: பிரதமர்
September 14, 2026, 10:08 pm
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:33 pm
