நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தலா ? அது அம்னோவின் கருத்து மட்டுமே: பிரதமர் அன்வார் பதிலடி 

கோழிக்கோடு: 

நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட  வேண்டும் என்று அழைப்பு விடுப்பது அம்னோ கட்சியின் கருத்து மட்டுமே 

அம்னோவின் கருத்தாக மட்டும் அது பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ஒவ்வொரு குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான் என்றும் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த வாரம் நடந்த அம்னோ பொதுப்பேரவையில் 16ஆவது பொதுத்தேர்தலை நடத்த நடப்பு அரசாங்கம் தயாராக உள்ளதா என்று அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சவால் விடுத்திருந்தார்.

இருப்பினும், 15ஆவது நாடாளுமன்றம் தவணைக்காலம் முடியும் வரையில் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தேசிய முன்னணி ஆதரவு வழங்கும் என்று ஸாஹித் ஹமிடி செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset